2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 27ல் தேர்வு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, மே 27 ல் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மார்ச் 16 முதல், 30 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 3 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டதில், 1.80 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகின. இவற்றில், 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 547 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Comments
Post a Comment