Posts

Showing posts from December, 2012

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 25 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 18,291 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.இன்றும், நாளையும் நடைபெறும் கவுன்சிலிங்கின் மூலம் காலி பணி இடங்களை ஆசிரியர்களே ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்த பின்னர் பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13-ந்தேதி நடக்கிறது.பள்ளிக் கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.முதல்-அமைச்சர் நேரில் ஆணையை வழங்க இருப்பதால் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் சென்ன

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வில் எவ்வித புகாருக்கு இடமின்றியும், ஒவ்வொரு அறையில் 50 பேர் வீதம் உட்காரவைத்து, காலை 7.30 மணி முதல் தொடங்கவும் மற்றும் சில கூடுதல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 / 2012, நாள்.10.12.2012 பதிவிறக்கம் செய்ய...

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் என இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த அறிவிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமா அல்லது தமிழகம் முழுவதுமா என்று இதுகுறித்து முறையான அறவிப்பு துறைவாரியாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்: முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிற து.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.தற்பொழுது வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டு வெளியிடும் நிலையில் இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே இது குறித்து முறையான அறிவிப்புவிரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர்,சொந்த மாவட்டத்தில்,பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில் நடந்தது.சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும்,காலி பணியிடங்கள் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.அப்படியிருக்கும் போது,மாவட்டத்திற்குள்,பணி நியமன கலந்தாய்வை நடத்தியிருக்கக் கூடாது.இன்று நடக்கும், வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்விற்கு அழைத்திருக்க வேண்டும்.இதற்கு மாறாக,சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், நேற்று,மாவட்டத்திற்குள் நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.சேத்துப்பட்டு, எம்.சி.சி.,மேல்நிலை பள்ளியில், 165 பேரும், காலையிலேயே குவிந்தனர். பல மணி நேரம் காத்திருந்ததற்குப் பின்,"காலி பணியிடங்கள் இல்லை; நாளைக்கு (இன்று) வாருங்கள்" என,அலுவலர்கள் தெரிவித்தனர்.இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து,முதன்மைக் கல்வி அலுவலருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 2, "செட்" சான்றிதழ் நகல்களை ஒப்படையுங்கள

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் எந்த மாவட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்.

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் இன்று கலந்துகொண்ட மாவட்டத்திலே பங்கு கொள்ள வேண்டும் என்றும், இன்றைய கலந்தாய்வு முடிந்த பின் புதிய காலிப்பணியிட பட்டியல் மற்றும் புதிய RANK LIST தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாளை பிற மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 /2012, நாள்.09.12.2012 பதிவிறக்கம் செய்ய...

சென்னையில் டிசம்பர் 13-ந் முதல்வர் பங்கு பெறும் விழா நேரம் மாற்றம்.

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்குவிழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ,மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை,விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாலையில் விழா நடத்தினால், அனைவரும்,வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படும் என,அதிகாரிகள் கருதினர்.இதனால், பகல், 12:00 மணிக்கு,விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்.

இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஆசிரியர் பட்டயப் பயிற்சி சான்றிதழ் எந்த மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த மாவட்டத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரி ( COMMUNICATION ADDRESS) உள்ள மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்

பட்டதாரி ஆசிரியர்கள் பொறுத்தவரை தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரியே (COMMUNICATION ADDRESS) உங்களுடைய சொந்த மாவட்டமாக கருதப்படும்,அதாவது சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்ட (CERTIFICATE VERIFICATION) மாவட்டத்தில் தான் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தால் உங்கள் வேலைவாய்ப்பக பதிவு மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்

சென்னை - எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு கோவை - பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை கடலூர் - சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர் தர்மபுரி - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம் திண்டுக்கல் - அவர்லேடி மே.நி. பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல் ஈரோடு - வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு காஞ்சிபுரம் - பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம் கன்னியாகுமரி - எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில் கரூர் - பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர் கிருஷ்ணகிரி - அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி மதுரை - இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை நாகை - கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர் நாமக்கல் - நாமக்கல் தெற்கு அரசு மே.நி. பள்ளி பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர் புதுக்கோட்டை - பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை ராமநாதபுரம் - சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம் சேலம் - சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு சிவகங்கை - சி.இ.ஓ., அலுவலகம் தஞ்சாவூர் - எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான (SGT) ONLINE கலந்தாய்வு 11.12.2012 அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 08.30 நடைபெறுகிறது- தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

click here to download the DEE proceeding of SGT Online Counselling on 11.12.2012 at 7.30am

தொடக்கக் கல்வி - தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - 11.12.2012 அன்று காலை 7.30 மணி முதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்துதல் குறித்து CEO & DEEOகளுக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 27925 / டி1 / 2012, நாள்.08.12.2012 பதிவிறக்கம் செய்ய...

தமிழ்நாடு முழுவதும் பணி நியமனம் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம் திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி காஞ்சிபுரம்: Dr. V.S. ஸ்ரீநிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கன்னியாகுமாரி : SLP மேல்நிலைப்பள்ளி கரூர் : பசுபதி ஈஸ்வர நகரமன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரி : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மதுரை: இளங்கோ நகராட்சி மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர் நாகப்பட்டினம் : கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகூர் நாமக்கல் : தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூர் : தனலட்சுமிஸ்ரீனிவாசன் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம் : சையத்தம்மாள் மேல்நிலைப்பள்ளி சேலம் : சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, நான்கு ரோடு திருவாரூர் : கஸ்தூரி பாய் காந்தி மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவள்ளூர் : ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப்பள்ளி திருப்பூர் : ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி திருச்சி : அரசு சையத்முதுசா மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி : சேப்டர் மேல்நிலைப்பள்ளி விருதுநகர் : KVS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரியலூர் : அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

புதிய 8627 பட்டதாரி ஆசிரியர், 9,600 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார். 15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப்

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.12 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. எனினும் இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் கலந்தாய்வு 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் என தொடக்கக்கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படவுள்ளது. பணி நியமன கலந்தாய்வு, காலிப்பணியிட விவரம் போன்றவை குறித்து கூட்டம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பதாகவும், எனினும் அக்கூட்டம் முடிந்த பிறகு இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அழகப்பா பல்கலை. மாணவர்கள் கவனத்துக்கு...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2011-12 கல்வி ஆண்டுக்குரிய வேதியியல் இரண்டாம் ஆண்டிற்கு வெள்ளிக்கிழமை (டிச. 7) முதல் தொடர் வகுப்புகள் நடைபெறவுள்ளன. இவ்வகுப்புகள் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் டிச. 7-ம் தேதி முதல் டிச. 16-ம் தேதிவரையிலும், டிச.18-ம் தேதி முதல் டிச.27-ம் தேதி வரையிலும்,டிச. 28-ம் தேதி முதல் டிச. 31-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் த.ரா.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாரதியார் பல்கலை: பி.எட்., சேர்க்கை அறிவிப்பு.

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில்,தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில்,இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500 வரைவோலை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.பிப்ரவரி 18 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விரிவான தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்.

ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஆனால் இதற்கான கலந்தாய்வு டிசம்பர் 07 ஆம் தேதி அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.டிசம்பர் 08 ஆம் தேதி பல ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளிவராத சூழலில் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.மிக குறுகிய காலத்தில் இது போன்ற முடிவுகளால் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிவர்களுக்கு போதிய செய்தி சென்றடைவதில் சிக்கல் எழுந்துள்ளது.மேலும் அழைப்பு கடிதம் (CALL LETTER) வடிவில் அனுப்பப்பட்ட பின்னரே கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற வழக்கமான அரசு செயல்முறைகளுக்கு மாறாக தற்போது கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆவணத்துடன் சென்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்வது என்று பலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.இப்படி அதிரடியான முடிவுகளை மேற்கொள்ளும் போது பெரிய அளவிலான ஊடக முறையில் செய்திகளை பரப்ப வேண்டும

TET Appointment Counselling Instructions/Preparations!...

TET Appointment Counselling Instructions/Preparations!... All the certificates submitted by the candidates must be checked and verified I.              SSLC Book/Mark Sheet II.            Higher Secondary (+2) Certificate/PUC III.           Degree and B.Ed., Mark Sheets IV.       Community Certificate (issued in the name of the Candidate’s father) V.           Certificate for Disability of persons under Special Category of Physically Challenged/Visually Impaired     Community should be verified only from the community certificate which is issued by the Competent authority in the name of father (The ST community certificate should have been issued only in the rank of Revenue Division Officers). If married women produces community certificate in husband’s name, such candidates are to be treated as General Turn. Other state community certificates are not valid. So such candidates are also to be treated as General Turn only.     Candidate who have studied 10+2+3+1 pattern of stu

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி நிலைக்கு உட்படுத்துவார்களா?

பதவி உயர்வு குறித்த கட்டுரையை பதிவிறக்கம் செய்ய...

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 13ல் பணி நியமன உத்தரவு.

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு,பணி நியமனம்,மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி,சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ.,திடலில் நடக்கிறது.முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று,புதிய ஆசிரியர்களுக்கு,பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக,கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த,டி.இ.டி., தேர்வில்,இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி,டி.ஆர்.பி., வெளியிட்டது.இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை,பிரம்மாண்டமாக நடத்த,தமிழக அரசு முடிவு எடுத்தது.இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக,பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது.இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்,விழாவை நடத்த,பம்பரமாக சுழன்று வருகின்றனர்.ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள் : சென்னை, நந்தனம்,ஒய்.எம்.சி.ஏ., திடலில்,13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு, 13ந் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார், முன்னதாக பணிநாடுநர்கள் ஆன்லைன் வழியாக பணியிடங்களை தேர்வு செய்ய உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை, 4:00 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வு,மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களில் 9,664 இடைநிலை ஆசிரியர்களாகவும்,8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையிலும்,பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையிலும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் முதல்முறையாக 18 ஆயிரம் பேருக்கு மொத்தமாக இப்போதுதான் பணி நியமனம் வழங்கப்படுகிறது.எனவே, இந்த விழாவை முதல்வர் தலைமையில் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குநர் ஆகியோரின் மேற்ப