Posts

Showing posts from August, 2012

அரசு ஐடிஐ மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள்!

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 471 நாள். 10.08.2012 பதிவிறக்கம் செய்ய... பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு ஐடிஐ -களில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு அறிவிப்பில்கூறப்பட்டுள்ளதாவது: அரசால் நடத்தப்படும் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே பயின்று வருகின்றனர். அவர்கள் தங்களின் இல்லங்களில் இருந்துகல்வி நிறுவனத்திற்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.இதனை கருத்தில்கொண்டு, கல்வி நிறுவனத்திற்கான அவர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வண்ணம், இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்.இதற்கென, அரசின் சார்பில் சுமார் ரூ.6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், அரசு ஐடிஐ -களில் படித்துவரும் 21925 மாணவ-மாணவிகள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகன விதிமுறை:விரைவில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து சிறுமி சுருதி பலியான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது.அப்போது, பள்ளி வாகன விதிமுறைகளை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், விதிமுறைகளை வகுத்து உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இதைக் கேட்ட உயர் நீதிமன்றம், காலம் கடத்தாமல் விதிமுறைகளை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இதேப்போன்ற விபத்துக்களில் உயிரிழந்த பள்ளிச் சிறார்களின் குடும்பத்துக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கல்வி சேவை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்ச்சிகளை தயாரித்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 8584 / ஈ1 / 2012, நாள்.07.08.2012 பதிவிறக்கம் செய்ய...

முன்னாள் பாரத பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி 17.08.2012 அன்று காலை 11.00 மணிக்கு எடுக்க உத்தரவு.

ஆகஸ்ட் 20.08.2012 அரசு விடுமுறை என்பதால் 17.08.2012 அன்றே நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க உத்தரவு. அரசு கடித எண். 23012 / GENL.L/ 2012 - 9 நாள். 20.07.2012 பதிவிறக்கம் செய்ய... நல்லிணக்க நாள் உறுதிமொழி பதிவிறக்கம் செய்ய...

புதிய அணுகுமுறையிலான கல்வி - 3 நாள் கல்வி சுற்றுலா 2012-13 பெண்கள் / SC/ST /Minority மாணவர்கள்- வழிகாட்டுதல் நெறிமுறைகள்

click here & download SSA Proceeding of the 3days Exposure Visit of Girls/SC/ST/Minority

State Seniority SGT Teachers Cannot Get District to DistrictTransfer Due to Supreme Court Stay

click here & Download -  State Seniority SGT Teachers Cannot Get District to DistrictTransfer Due to Supreme Court Stay

இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், தானாக அந்த ஊழியரின் பணி நிரந்தரமாகி விடும்'-சென்னை ஐகோர்ட்

மேட்டூர் அணை மின் வாரியத்தில், ஒப்பந்த தொழிலாளராக ராஜு என்பவர் பணியாற்றினார். 1991 முதல் 1999ம் ஆண்டு வரை, பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம், இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின், மின் வாரியத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். 2003ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். இவரை பணி நிரந்தரம் செய்து, மின் வாரியம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.இதையடுத்து, மின் வாரியத்தில், 480 நாட்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளதால், பணி நிரந்தர அந்தஸ்து பெற கணவருக்கு உரிமையுள்ளது என்றும், குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ராஜுவின் மனைவி லட்சுமி மனு தாக்கல் செய்தார். மின் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வாரியத்தின் நிரந்தர ஊழியர் இல்லை என்பதால், 1981ம் ஆண்டு சட்டப்படியான பலன்களை வழங்க முடியாது என கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஒரு ஊழியர், இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து, 480 நாட்கள் பணியாற்றியிருந்தால், அவருக்கு நிரந்தர ஊழியர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். கடந்த 1981

1 முதல் 5ம் வகுப்பு வரைஇரண்டாம் பருவத்துக்குபுத்தகங்கள் வினியோகம்

தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தக எடை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பருவத்துக்கு ஏற்ப பாடங்களை தொகுத்து ஒரே புத்தகமாக வழங்கப்பட்டது. முதல் பருவத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு புத்தகமாகவும், 6, 7, 8 வகுப்புகளுக்கு மொழி பாடங்கள், இதர பாடங்களுக்குஎன தனித்தனியே 2 புத்தகங்கள் வழங்கப்பட்டது. தற்போது 2-ம் பருவத்துக்கு அக்டோபர்முதல் டிசம்பர் வரை புத்தகங்கள் அச்சிடப்பட்டுவழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை செப்டம்பரிலேயே பள்ளிகளுக்கு வினியோகித்துவழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.1 முதல் 5-ம் வகுப்பு வரை முதல் பருவத்தில் ஒரு புத்தகமாக வழங்கப்பட்டதை மாற்றி, 2வது பருவத்தில் மொழி பாடத்துக்கு ஒன்றும் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒன்றுமாக 2 புத்தகம் வழங்கப்பட உள்ளது.

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1000 ஆக நிர்ணயிப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என பி.எப். வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் தொழிலாளர்கள் 6.16 கோடி பேர் பி.எப். சந்தா செலுத்துகின்றனர். பி.எப். வாரியத்தில் கடந்த 2011ம் ஆண்டு நிலவரப்படி ரூ.4.66 லட்சம் கோடி நிதி உள்ளது. இத்தொகையில் இருந்து குறிப்பிட்ட பகுதி, ஓய்வூதிய நிதியாக பிரிக்கப்படுகிறது. இதிலிருந்து சந்தாதாரர்கள் ஓய்வு பெற்றதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் செலுத்திய சந்தா அடிப்படையில்கொடுக்கும் போது, சிலருக்கு வெறும் ரூ.100 மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.எனவே, ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1000 ஆக நிர்ணயிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், பி.எப். வாரியத்தின் டிரஸ்டிகள் கூட்டம் டெல்லியில் நடந் தது. இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர், டிரஸ்டி ஒருவர் கூறியதாவது:குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக நிர்ணயிக்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது குறித்து விர

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக முதல்வர் உத்தரவு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 470 நாள். 09.08.2012 பதிவிறக்கம் செய்ய... மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும்மாணவ, மாணவியர்ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர்பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தை

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக முதல்வர் உத்தரவு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 470 நாள். 09.08.2012 பதிவிறக்கம் செய்ய... மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும்மாணவ, மாணவியர்ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர்பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தை

அனைத்து பள்ளிகளில் காலையில் நடைபெறும் வழிப்பாட்டு கூட்டத்தின் நிறைவின் போது நாட்டுப்பண் மாணவ / மாணவியர்களால் பாடி நிறைவு செய்ய இயக்குனர் உத்தரவு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 04.08.2012 பதிவிறக்கம் செய்ய...

Regular B.Ed Admission 2012-13 - Application Issue From 11.08.2012 to 18.08.2012

click here for Guidelines for Admission to B.Ed. Courses for the Academic Year 2012-2013...

கல்வித் தொலைக்காட்சி பதிவு செப்பட்ட சிறந்த கற்றல் கற்பித்தல் நிழ்சிகளை மீண்டும் பதிவு செய்ய -ஆகஸ்ட் முதல் 30 வரை படபிடிப்பு -scert முடிவு

click here & download the scert proceeding of Education TV - Best Programme Re-shooting

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு பருவத்துக்கும் 2 புத்தகங்கள் அச்சடித்து வழங்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.    இப்போதுள்ள முறையின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பருவத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.   இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடுவதற்கு முன்பாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த புத்தகங்களை எவ்வாறு அச்சிடலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.அதனடிப்படையில், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அதிகப் படங்களுடனும்,குறைந்த பக்கங்களிலும் புத்தகங்களைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டது.புத்தகங்களை எளிமையாக்கும் வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு புத்தகங்களாகப் பிரித்து அச்சிடப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், பிற பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் அச்சிடப்படுகின்றன.செப்டம்பர் முதல் வாரத்துக்குள்... ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம்பருவத்துக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் தலா இரண்டு புத்தகங்கள் வீதம் 16 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தக

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு: முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் குளறுபடி?

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நடந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வில், முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பதவி மூப்பு அடிப்படையில் 1,023 உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு, ஐந்து சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆறு நாட்களுக்கு முன், இணைய தளத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது. இந்த பட்டியலை பார்த்த, முன்னாள் ராணுவத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் கோட்டாவில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டியல் வெளியானது.இதில் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரே மாவட்டத்தில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதும், இவர்களின் பிறந்த தேதியை வைத்து பார்க்கும் போதும், தேர்வு செய்யப்பட்டவர்கள் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வாய்பில்லை என்பதும் தெரியவந்தது.இதுக

மருத்துவ பல்கலை துணைவேந்தர் ஓய்வு வயது 70 ஆக உயர்வு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா உத்தரவிட்டுள்ளார்.துணைவேந்தர் பதவியில் நியமிக்கப்படுவோர், பதவி ஏற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதில், அவரது பதவி முடியும் வகையில் சட்டம் இருந்தது. இந்நிலையில், உயர்கல்வித் துறையின் சார்பில் இயங்கும், பாரதியார், பாரதிதாசன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தமிழ்நாடு கல்வியியல் கல்லூரிபல்கலை உள்ளிட்ட ஒன்பது பல்கலை துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 65ல் இருந்து, 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா, கடந்த மாதம், அவசரச் சட்டம் பிறப்பித்தார்.தற்போது, சுகாதாரத் துறை சார்பில் இயங்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் செயல்படும், உடற்கல்வி, விளையாட்டு பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயதையும், 65ல் இருந்து 70 ஆக உயர்த்தி, கவர்னர் ரோசையா நேற்று உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசிதழில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பள்ளிகளை பசுமைப்படுத்த இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 16283 / ஜெ3 / 2012,  நாள். 08.08.2012 பதிவிறக்கம்செய்ய...

SCERT - CCE கல்வி இணை செயல்பாடுகளில் பயிற்சி - தொடக்க வகுப்புகளுக்கான எளிய முறை உடற்பயிற்சி மற்றும் தியான செயல்பாடுகள் குறித்துஒரு நாள் பயிற்சி அளிக்க உத்தரவு.

மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 06.08.2012 பதிவிறக்கம் செய்ய...

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு நாளை 09.08.2012 வியாழன் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 468 நாள். 08.06.2012 மற்றும் அரசாணை எண்.708 நாள்.08.08.2012 பதிவிறக்கம் செய்ய...

தொடக்கக் கல்வி - 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் நாடுநர்கள் இல்லாமையால் SC / ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதே இனத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின்விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 16431 / டி1 / 2012, நாள். 07.08.2012 பதிவிறக்கம்செய்ய...

2012- 13ல் முப்பருவ கல்விமுறை 9,10ம் வகுப்புகளுக்கு அமல் - தமிழக அரசு குழு அமைத்து உத்தரவு.

நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்தகல்வியாண்டில் (2012-2013) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: வரும் 2013௧4ம் கல்வியாண்டில், 9, 10ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை, முப்பருவ முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை உள்ளடக்கி தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு இணை இயக்குனரை, பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்.பாடப் புத்தகங்கள் எழுதும் பணிக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும்,அரசுக்கு, இயக்குனர் கருத்துரு அனுப்பினார். இதைபரிசீலித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில், பாட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து,தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு சபிதா தெரிவித்து உள்ளார்.அரசு உத்தரவுப்படி, தமிழ் பாட