அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்.

ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000
ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன
ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஆனால் இதற்கான கலந்தாய்வு டிசம்பர் 07 ஆம் தேதி அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.டிசம்பர் 08 ஆம் தேதி பல ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளிவராத சூழலில் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 09 மற்றும்
10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.மிக குறுகிய காலத்தில் இது போன்ற
முடிவுகளால் கலந்தாய்வில் கலந்து கொள்ள
வேண்டிவர்களுக்கு போதிய செய்தி சென்றடைவதில்
சிக்கல் எழுந்துள்ளது.மேலும் அழைப்பு கடிதம் (CALL
LETTER) வடிவில் அனுப்பப்பட்ட பின்னரே கலந்தாய்வு
நடத்தப்பட வேண்டும் என்ற வழக்கமான அரசு
செயல்முறைகளுக்கு மாறாக தற்போது கலந்தாய்விற்கு
அழைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆவணத்துடன் சென்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்வது என்று
பலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.இப்படி அதிரடியான முடிவுகளை மேற்கொள்ளும் போது பெரிய அளவிலான ஊடக முறையில் செய்திகளை பரப்ப வேண்டும் (Large Level Of Media Broadcasting).
முழுமையான தகவலை உரியவருக்கு அளிக்க வேண்டும்.என்பவற்றினை பின்பற்றினால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குழப்பங்களை
முன்கூட்டியே சமாளிக்கலாம்.நாளை நடக்கவிருக்கும்
கலந்தாய்வில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்
என்பதுதான் இப்போது விடுக்கப்பட்டுள்ள சவால்.
இதனை உணர்ந்து கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அவர்களவர்கள் மாவட்ட CEO அலுவலகங்களுக்கு தங்களின் original October
TET Hallticket இரண்டு மூன்று Passport photo
மற்றும் சான்றிதழ்களுடன் சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.