மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சியளிக்க உத்தரவு-

சென்னை : பிளஸ் 2 மாணவர்களில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என, மூன்று வகையாக பட்டியல் தயாரித்து, சம்பந்தப்பட்ட மாணவருக்கு ஏற்ப, உரிய பயிற்சிகளை அளித்து, ஒட்டுமொத்த அளவில் கல்வித் தரத்தை உயர்த்த, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூடுதல் மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.நடந்து முடிந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட வாரியாக, மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதம் பிடித்த, நான்கு அரசுப்பள்ளிகளை தேர்வு செய்து, அவற்றின் தலைமை ஆசிரியருக்கான இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி,சென்னையில் நேற்று துவங்கியது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின், மாநில திட்ட இயக்ககத்தின் சார்பில், டி.பி.ஐ., வளாகத்தில் இந்த பயிற்சி நடக்கிறது.பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி, நேற்று நடந்தது. 125 தலைமை ஆசிரியர் பங்கேற்றனர். தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் பொறுப்பேற்று, தேர்ச்சியை அதிகரித்த தலைமை ஆசிரியர், அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.கூட்டத்தில், தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட,"டிப்ஸ்&'கள்:
* பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்கள் விவரம், எப்போதும் தலைமை ஆசிரியர் பார்வையில் இருக்க வேண்டும்.
* குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர், தேர்ச்சி பெற்ற மாணவர், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற வகையில், மாணவர் பட்டியலை தனித்தனியே, ஒவ்வொரு தேர்வுக்கும் தயாரிக்க வேண்டும்.
* இப்படி பிரிக்கப்பட்ட மூன்று வகையான மாணவர்களுக்கும், தனித்தனி கவனம் செலுத்தி, ஒட்டுமொத்த தேர்ச்சியை அதிகரிக்க, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேர்ச்சியில் மிகவும் பின்தங்கும் மாணவர்களுக்கு, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து, மற்ற விடுமுறை நாட்களிலும், இந்த சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.
* ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர்கள் போன்ற சிறப்பு ஆசிரியர்களை, தேர்வு நடைபெறும் நாளில் மேற்பார்வையாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
* அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு, வழிபாட்டுக் கூட்டத்தின்போது, பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
* வகுப்பில் உள்ள மாணவர்களை, சிறு, சிறு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் தனி பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள், ஒவ்வொருமாணவரிடமும் தனித்தனியாக பேசி, அவர்களிடம் உள்ள திறமைகளை அறிந்து, அதை மையப்படுத்தி பேசி, ஊக்குவிக்கலாம்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.