குரூப் 1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம்
தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரசுப்பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை ஆட்சியர்,காவல் துறை துணை கண்காணிப்பாளர்,வணிகவரித் துறை உதவி ஆணையர் மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத்
தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது தேர்வு தேதி
மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க
கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம்
தேதி தேர்வு நடைபெறும்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,தாங்கள்
விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள்
கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.