பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு இடைநிலை
ஆசிரியர் சங்க மாநில தேர்தல் திருச்சியில் நடந்தது. தேர்தல் ஆணையர்களாக நெடுஞ்செழியன், பாசி செயல்பட்டனர்.இதில் சென்னையை சேர்ந்த கயத்தாறு மாநில தலைவராகவும்,நெல்லை இசக்கியப்பன் பொது செயலாளராகவும்,புதுக்கோட்டை மதலை முத்து
பொருளாளராகவும்,திருச்சி அருணகிரியார் அமைப்பு
செயலாளராகவும்,காஞ்சிபுரம் வெங்கடேசன் தலைமை இட செயலாளராகவும்,கன்னியாகுமரி எட்வின் பிரகாஷ் துணை பொது செயலாளராகவும், மாநில செயலாளராக
சென்னை ஜெயராணி,மாநில தணிக்கையாளர்களாக
நெல்லை பாபு, மாநில துணைத் தலைவர்களாக வேலூர் பாக்கியராஜ், திருவண்ணாமலை நவநீத சுந்தர், மாநில
இணை செயலாளர்களாக விருதுநகர் அப்பாதுரை,
விழுப்புரம் ஸ்டீபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 18 ஆயிரம்
இடைநிலை ஆசிரியர்களை 1.6.2006 க்கு முன்பிருந்து
பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். பிளஸ் 2 முடிக்காமல் பதவி உயர்வில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஆசிரியர் பட்டய படிப்பை பிளஸ் 2க்கு இணையாக கருதி சென்னை ஐகோர்ட்
அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்
தகுதி தேர்வை ரத்து செய்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மாநில சீனியாரிட்டி
அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.