உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள,
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,அடுத்த மாதம், 7ம் தேதி,கலந்தாய்வு நடக்கிறது.சென்னையில்
நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் உரிய சான்றுகளுடன் ஆஜராக வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில்,2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
நேரடியாக நிரப்ப,ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
ஒதுக்கீடு பெறப்பட்டது.இதன் படி,ஆதிதிராவிடர்
நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47
பேருக்கு, அடுத்த மாதம்,7ம் தேதி, 11:00 மணிக்கு,
சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில்,
கலந்தாய்வு நடக்கிறது.அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment