ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் சோதனை: 20 மாணவிகள் கண்ணீர்
மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி வழங்கிய
பட்டப்படிப்பு சான்றிதழ் ஏற்கப்படாததால்,ஆசிரியர்
தகுதி தேர்வில் வெற்றி பெற்றும்,வேலை கிடைக்காமல் 20 மாணவியர் போராடுகின்றனர்.இங்கு பி.ஏ., ஆங்கில
இலக்கியம், 1999ல் "தொடர்பியல் ஆங்கிலம்" என பெயர் மாற்றப்பட்டது.இதில் பட்டம் பெற்ற மாணவிகள், 2012ல், டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று,சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றனர்.அப்போது, "தொடர்பியல் ஆங்கிலத்துக்கு"
அரசு அங்கீகாரம் பெறாமல் இருந்தது. இந்த
பட்டப்படிப்பை டி.ஆர்.பி.,நிராகரித்தது.மாணவியர் பல
போராட்டங்களுக்கு பின்,நவம்பர் 27ல், அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆனாலும்,பட்டப்படிப்பு சான்றிதழ்களை டி.ஆர்.பி.,ஏற்காததால், 20 மாணவிகள்
வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட
திவ்யபிரியா,புனிதா (மதுரை),லட்சுமி (தேனி),
திவ்யா (ராமேஸ்வரம்),முத்துப்பிரியா (சிவகாசி)
கூறுகையில், "பி.ஏ.,சேரும் போது "ஆங்கிலஇலக்கியம்" என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. பட்டம் பெற்ற போது தான் "தொடர்பியல் ஆங்கிலம்"என தெரிந்தது.
கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது "பட்டபடிப்பு பெயர் தான் மாறியுள்ளதால் ஒன்றுமில்லை," என
கூறிவிட்டது.கருணை அடிப்படையில் எங்களுக்கு அரசு பணி வழங்கவேண்டும்," என்றனர்."அரசு கல்லூரியில் "பட்டப்படிப்பின்" பெயர் மாற்றப்பட்டு, 11
ஆண்டுகள் அங்கீகாரம் பெறவில்லை.அங்கு படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது."இணையான சான்றிதழ்
பெற்றால் பரிசீலிக்கப்படும்" என்று,தெரிவித்த
டி.ஆர்.பி.,யும், அந்த படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகும்,"பட்டப்படிப்பு"சான்றிதழை நிராகரித்தது யார்
குற்றம்," என பெற்றோர் குமுறினர்.
Comments
Post a Comment