அரையாண்டு தேர்வில் பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்?
கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப்
பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள்,பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும்,
வரும் அரையாண்டு தேர்விலேயே இது நடைமுறைப்
படுத்தப்படும் எனவும்,கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட, பாடப்
புத்தகத்தில் இல்லாத,கட்டாயமாக்கப்பட்ட
வினாக்களால், சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது; மாணவ, மாணவியர் பலர்,
கல்லூரியில்,விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர
முடியாமல் பாதிக்கப்பட்டனர்.தற்போது,மாணவர்களின்
நலன் கருதி, கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக
மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கட்டாய வினாக்கள்,பொது வினாக்களாக மாற்றப்பட உள்ளது.
வாய்மொழி உத்தரவு,எழுத்துப்பூர்வமாக வரும் வரை, ஏதுவும் சொல்ல இயலாது" என்றார்.கோவை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,கணிதப் பாடத்தில், ஐந்து மதிப்பெண் ஒன்றும்,இரண்டு மதிப்பெண் ஒன்றும், கட்டாய வினாக்களாக
கேட்கப்பட்டன. இதனால்,சதம் பெற்ற மாணவர்களின்
எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.வரும், 19ம் தேதி முதல்,ஜன., 7ம் தேதி வரை,அரையாண்டு தேர்வு
நடக்க உள்ளது. கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டது குறித்து,தகவல் சார்ந்த அறிக்கை ஏதும், இதுவரை கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment