Posts

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 25 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 18,291 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.இன்றும், நாளையும் நடைபெறும் கவுன்சிலிங்கின் மூலம் காலி பணி இடங்களை ஆசிரியர்களே ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்த பின்னர் பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13-ந்தேதி நடக்கிறது.பள்ளிக் கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.முதல்-அமைச்சர் நேரில் ஆணையை வழங்க இருப்பதால் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் சென்ன

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன கலந்தாய்வில் எவ்வித புகாருக்கு இடமின்றியும், ஒவ்வொரு அறையில் 50 பேர் வீதம் உட்காரவைத்து, காலை 7.30 மணி முதல் தொடங்கவும் மற்றும் சில கூடுதல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 / 2012, நாள்.10.12.2012 பதிவிறக்கம் செய்ய...

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் என இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த அறிவிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமா அல்லது தமிழகம் முழுவதுமா என்று இதுகுறித்து முறையான அறவிப்பு துறைவாரியாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்: முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிற து.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.தற்பொழுது வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டு வெளியிடும் நிலையில் இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே இது குறித்து முறையான அறிவிப்புவிரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர்,சொந்த மாவட்டத்தில்,பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில் நடந்தது.சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும்,காலி பணியிடங்கள் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.அப்படியிருக்கும் போது,மாவட்டத்திற்குள்,பணி நியமன கலந்தாய்வை நடத்தியிருக்கக் கூடாது.இன்று நடக்கும், வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்விற்கு அழைத்திருக்க வேண்டும்.இதற்கு மாறாக,சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், நேற்று,மாவட்டத்திற்குள் நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.சேத்துப்பட்டு, எம்.சி.சி.,மேல்நிலை பள்ளியில், 165 பேரும், காலையிலேயே குவிந்தனர். பல மணி நேரம் காத்திருந்ததற்குப் பின்,"காலி பணியிடங்கள் இல்லை; நாளைக்கு (இன்று) வாருங்கள்" என,அலுவலர்கள் தெரிவித்தனர்.இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து,முதன்மைக் கல்வி அலுவலருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 2, "செட்" சான்றிதழ் நகல்களை ஒப்படையுங்கள

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் எந்த மாவட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்.

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் இன்று கலந்துகொண்ட மாவட்டத்திலே பங்கு கொள்ள வேண்டும் என்றும், இன்றைய கலந்தாய்வு முடிந்த பின் புதிய காலிப்பணியிட பட்டியல் மற்றும் புதிய RANK LIST தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாளை பிற மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 /2012, நாள்.09.12.2012 பதிவிறக்கம் செய்ய...